"ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் பேசியது ஏன்?"- பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கேள்வி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தற்போது உயிருடன் இருப்பது ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் குறிப்பிட்டது பற்றி முதலமைச்சர் விளக்கம் தர வேண்டும் என அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.
x
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தற்போது உயிருடன் இருப்பது ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டது பற்றி முதலமைச்சர் விளக்கம் தர வேண்டும் என அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். காரைக்குடியில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சரவை கூடி தான், 7 பேர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பியதை சுட்டிக்காட்டியுள்ளார். 7 பேர் விடுதலைக்காக ஆளுநர் கையெழுத்து போட வேண்டாம் என்று செல்லூர் ராஜூ நினைக்கிறாரா? என்று அற்புதம்மாள் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்