இன்று நிறைவு பெறுகிறது யானைகள் முகாம்

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்றது.
இன்று நிறைவு பெறுகிறது யானைகள் முகாம்
x
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்றது. கடந்த மாதம் 14 ஆம்தேதி தொடங்கிய இந்த யானைகள் முகாமில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கப்பட்டது. 48 வது நாளாக நடைபெற்ற இந்த முகாம்  இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து யானைகள் மீண்டும் கோவில்களுக்கு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்