பாஜக 30 இடங்களில் வெற்றி என்பது கனவு தான் : மக்களை சிரிக்க வைக்க தமிழிசை கூறியிருப்பார் - சீமான்

வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவே, 14 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பாஜக 30 இடங்களில் வெற்றி என்பது கனவு தான் : மக்களை சிரிக்க வைக்க தமிழிசை கூறியிருப்பார் - சீமான்
x
வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவே, 14 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களை சிரிக்க வைக்கும் நோக்கில், 30 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என தமிழிசை கூறியிருப்பார் என, தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் வாக்குகளை பெற்றிடவே, எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டியிருப்பதாக குற்றஞ்சாட்டினார். 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தாலும் தனித்து போட்டியிடுவோம் என்றும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்