பாழடைந்த கிணற்றுக்குள் இளம்பெண்ணின் எழும்புக் கூடு

2012-ல் மாயமான பெண்ணா? கொலையா? என விசாரணை
பாழடைந்த கிணற்றுக்குள் இளம்பெண்ணின் எழும்புக் கூடு
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில், கிணற்றை தூர்வாரியபோது, பெண்ணின் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், தமது தோட்டத்தில் வீடு கட்டும் பணிக்காக பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்துள்ளார். அப்போது, கிணற்றுக்குள் பெண்ணின் எலும்புக் குவியல் இருந்தது. தகவலின் பேரில் வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், எழும்புக் கூட்டை ஆய்வு செய்ததில், 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் எலும்புக் கூடு என்று தெரியவந்தது. இதனிடையே, 2012-ம் ஆண்டு அப்பகுதி இளம்பெண் ஒருவர் மாயமானது தெரியவந்துள்ளது. எனினும், கொலையா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்