கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ. 50 லட்சம் பறித்த கும்பல் கைது

ஆபாச படம் எடுத்து மிரட்டியது அம்பலம்
கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ. 50 லட்சம் பறித்த கும்பல் கைது
x
கோவையில் கூட்டுறவு சங்க செயலாளரை கடத்தி ஆபாச படம் எடுத்து மிரட்டி 50 லட்சம் ரூபாய் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள ரத்தினபுரியை சேர்ந்த சரவணகுமார் என்பவர் தன்னை சிலர் ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பணம் பறிக்கும் நோக்கில், வீரகேரம் அண்ணாநகரை சேர்ந்த பத்மநாபன் உள்ளிட்ட 6 பேர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சரவணகுமாரை கடத்தி, ஆபாச படம் எடுத்து மிரட்டி  50 லட்சம் ரூபாய்  பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, பத்மநாபன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார், வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்