ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலை திறக்கப்படாது என்பதால் மக்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், தூத்துக்குடியில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் சுயநினைவு இல்லாமல் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த முடியாத சூழல் உள்ளதாக கூறினார். மேலும் அவர் தகவல் தெரிவிக்கும் போது உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்