தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

திருமண ஏற்பாடு செய்யாததால் ஆத்திரம்
தந்தையை வெட்டிக் கொன்ற மகன்
x
திருமண ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை வெட்டிக்கொன்ற சம்பவம் திருத்துறைப்பூண்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அங்குள்ள எடையூர் அம்மளூரில் தலை மற்றும் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த்து. அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில், அப்பகுதியில் வசித்து வரும் கணேசனுக்கும் அவரது மகன் முருகப்பாவுக்கும் திருமண ஏற்பாடு செய்வது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கணேசனை கோடாரியால் முருகப்பா வெட்டியதில் அவர் இறந்தததும் தெரியவந்தது.  தொடர்ந்து மகன் முருகப்பாவை கைது செய்த போலீசார் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்