திருவாரூர் தேர்தல் : இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
x
* கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். திருவாரூர் தொகுதி தேர்தலை தள்ளி வைக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தது.

* இதனையடுத்து திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்த முடியுமா என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

* இந்நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அறிக்கையை இன்று மாலைக்குள் அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு,  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். 

* மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை கிடைத்த பிறகு தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்