கருணாநிதிக்கு சட்டப்பேரவை தலைவர் தனபால் புகழாரம்

திரைப்படம், இலக்கியம், அரசியல் என முத்துறைகளிலும் சிறப்பாக பணியாற்றியவர் கருணாநிதி என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் புகழாரம் சூட்டினார்.
கருணாநிதிக்கு சட்டப்பேரவை தலைவர் தனபால் புகழாரம்
x
திரைப்படம், இலக்கியம், அரசியல் என முத்துறைகளிலும் சிறப்பாக பணியாற்றியவர் கருணாநிதி என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் புகழாரம் சூட்டினார். பேரவையில் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து  பேசிய அவர், அனைத்து மக்களாலும் பாராட்டு பெற்ற ஒரு தலைவர் என கூறினார். அவரது தமிழை கேட்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், பேரவையில் நடக்கும் விவாதத்தின் போது சிறப்பாக பேசக் கூடியவர் எஎன்றும் அவர் தெரிவித்தார். 

"கருணாநிதியின் சாதனை மண்ணில் நிலைத்திருக்கும்" - எடப்பாடி பழனிசாமி புகழாரம்

தமிழக சட்டப்பேரவையில் மன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி என்றும், அரசியல் மட்டுமின்றி திரைப்படங்களிலும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்றார். தமிழக அரசியல் என்பதை தாண்டி இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்தவர் என்றும், எளிய தோற்றம், அனைவரையும் அரவணைத்து செல்லும் குணமுடையவர் என்றும் தெரிவித்தார். கருணாநிதி மறைந்தாலும், அவர் செய்த சாதனை இந்த மண்ணில் நிலைத்திருக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் பேசினார். 

அவையில் தேம்பி தேம்பி அழுத துரைமுருகன் 

இரங்கல் உரையாற்றிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், கருணாநிதி கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது, திடீரென துரைமுருகன் கண் கலங்கி நின்றார். கருணாநிதியை நினைத்து சிறிது நேரம் தேம்பி தேம்பி அழுத அவர், பேச முடியாமல் தடுமாற்றம் அடைந்தார்.   


Next Story

மேலும் செய்திகள்