அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நரிக்குறவ மக்கள்...

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக நரிக்குறவ இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
x
துவாக்குடி பகுதியில் உள்ள தேவராயநேரி ஊரில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஊசி, பாசி, கருகமணி பவழம், மணி மாலைகள் உள்ளிவற்றை விற்று அதில் வரும் வருமானத்தை வைத்து இவர்கள் வாழ்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அரசால் செய்துக்கொடுக்கப்பட்ட அடிப்படை வசதிகளுக்கு பின், அரசின் எந்த ஒரு சலுகையும் கிடைப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும் குடிநீர், நியாயவிலை கடைகளில் முறையின்றி எப்போதாவது விநியோகிக்கப்படும் பொருட்கள், சாக்கடை வசதி இல்லாததால் தேங்கி நிற்கும் கழிவுநீர் என அனைத்து வகையிலும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்