டாஸ்மார்க் கடையில் துப்பாக்கி காட்டி மிரட்டியவர் கைது

கோவை வீரகேரளம் டாஸ்மாக் கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டாஸ்மார்க் கடையில் துப்பாக்கி காட்டி மிரட்டியவர் கைது
x
நேற்று இரவு 7 மணியளவில் குடிபோதையில் மதுபான கடைக்கு வந்த மர்ம நபர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி  மிரட்டியுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் துப்பாக்கி வைத்திருந்த நபரை கைது செய்து அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் செல்வபுரம் குமாரசாமி காலனி பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பதும் அவரது தந்தை ஒய்வுபெற்ற தாசில்தார் என்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து 4 செல்போன்கள், வாக்கி டாக்கி, கைத்துப்பாக்கி, மடிக்கணினி, கேமரா, இரண்டு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்