தேவாலயத்தை நிர்வகிப்பதில் மோதல் : ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம்...

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் பகுதியில் உள்ள தேவாலய ஆயர் இல்லத்தை ஒருதரப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவாலயத்தை நிர்வகிப்பதில் மோதல் : ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம்...
x
குமரி மாவட்டம் பள்ளம் பகுதியில் உள்ள தேவாலயத்தை நிர்வகிப்பதில் இரு தரப்பினரிடையே  மோதல் ஏற்பட்டது. இதனால் தேவாலயத்திற்கு சொந்தமான நகைகள், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை தேவாலய தற்காலிக பங்கு தந்தை, கோட்டார் மறை மாவட்ட ஆயர் அலுவலகத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு தரப்பை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயரை சந்திக்க விடாததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், தரையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்