3 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத சலவை தொட்டி : நடவடிக்கை எடுக்க சலவை தொழிலாளர்கள் கோரிக்கை
திருத்தணியில், கட்டி முடிக்கப்பட்ட சலவை தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி சலவை தொழிலாளர்கள் கோரிக்கை.
திருத்தணியில் கட்டி முடிக்கப்பட்ட சலவை தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி சலவை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அனுமதாபுரம் 13 ஆம் வார்டில் சலவை தொட்டி கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், அந்த பகுதியில் போடபட்ட போர்வெல்லில் போதிய தண்ணீர் வரததால் சலவை தொழிலாளர்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. திருத்தணியில் 100க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர் வசித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story