கஜா புயல் சேதம் : அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்
கஜா புயல் சேதம் : அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை
x
கஜா புயல் தாக்குதலில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இப்பகுதியில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்டுக்கோட்டை - மன்னார்குடி சாலையில் உள்ள கண்ணுகுடி கிராமத்தில் சீரமைப்பு பணி நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மின்சாரம் இல்லாததால் குடிநீர் கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கும் மக்கள், இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் தங்கள் கிராமத்திற்க வரவில்லை என்றும் கூறியுள்ளனர். உணவு, தங்குமிடம் இன்றி சிரமப்படுவதாக தெரிவிக்கும் அவர்கள், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்