விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்கள் : 14 மணி நேரம் உயிருக்கு போராடிய இளைஞர் மீட்பு

திருச்சி மணப்பாறை அருகே, ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்கள், 14 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டனர்.
விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்கள் : 14 மணி நேரம் உயிருக்கு போராடிய இளைஞர் மீட்பு
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இளங்காகுறிச்சி அருகே உள்ள ஆசாத் ரோடு என்ற இடத்தில், இளைஞர் ஒருவர் தண்டவாளம் அருகே இறந்து கிடந்ததை, ரயில்வே ஊழியர் பார்த்துள்ளார். மேலும், இறந்த இளைஞரின் அருகில் முனகல் சப்தம் வந்து கொண்டிருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் ரயில் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, தேடி பார்த்தபோது, 15 அடி பள்ளத்தில் மற்றொரு இளைஞர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து, மணப்பாறை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது, சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பதும் மதுரையில் வேலைபார்த்து வரும் அவர் திருச்சி வழியாக மும்பை செல்லும் விரைவு ரயிலில் சென்றதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு பயணம் செய்தபோது தவறி விழுந்த அவர், நேற்று பிற்பகல் வரை 14 மணி நேரத்திற்கும் மேலாக ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அதிர்ச்சி தகவலும் தெரிந்தது.ஒரே இடத்தில் இரண்டு பேரும் ரயிலில் இருந்து தவறி விழுந்தது எப்படி என்பது குறித்தும், உயிரிழந்த இளைஞர் யார் என்பது குறித்தும் திருச்சி ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்