தாமிரபரணி புஷ்கரம் விழா நிறைவு - 20 லட்சம் பேர் புனித நீராடி வழிபாடு

தாமிரபரணி புஷ்கரம் விழா இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், சுமார் 20 லட்சம் பேர் புனித நீராடி உள்ளனர்.
தாமிரபரணி புஷ்கரம் விழா நிறைவு - 20 லட்சம் பேர் புனித நீராடி வழிபாடு
x
* 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா புஷ்கரம் விழா தாமிரபரணி ஆற்றில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர்கள் பலர் இந்த விழாவில் பங்கேற்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் புனித நீராடினர். 

* நெல்லை மாவட்டத்தில் 12 லட்சம் பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8 லட்சம் பேரும் நீராடியதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஆதினம் தரப்பில் 40 லட்சம்  மக்கள் நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இறுதி நாளான இன்று, நெல்லை தைப்பூச படித்துறையில் நடைபெற்ற தீப ஆராதனை நிகழ்வில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன், ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்