போக்குவரத்து பணிமனையில் புகுந்த மழைநீர் : 20 ஆயிரம் லிட்டர் டீசல் வீண் என புகார்

விருதுநகரில் நேற்றிரவு பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
போக்குவரத்து பணிமனையில் புகுந்த மழைநீர் : 20 ஆயிரம் லிட்டர் டீசல் வீண் என புகார்
x
விருதுநகரில் நேற்றிரவு பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அரசு போக்குவரத்து பணிமனையில் மழைநீர் குளம் போல் தேங்கி இருப்பதால் பேருந்துகள் அனைத்தையும் பணிமனையை விட்டு வெளியே எடுக்க முடியாமல் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்குப்பின் ஒரு சில பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் பணிமனையில் வெள்ள நீர் புகுந்ததால், அங்கு இருந்த 20 ஆயிரம் லிட்டர் டீசல் வீணாகி உள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்