மூவர் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் - ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாதம்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
மூவர் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் - ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாதம்
x
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்த கூட்டத்தில்,  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வாலா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விஞ்ஞானி சதீஸ்.சி. கர்கோட்டி, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர் அப்துல் சலீம், தூத்துக்குடி பேராசிரியர் பாத்திமா, திமுக முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் தரப்பு மனுக்களை அளித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் சார்பிலும், மூவர் குழுவிடம் மனு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வணிகர்கள், பொதுமக்கள் என 4 லட்சம் மனுக்கள் கையப்பமிடப்பட்ட மனு, மூவர் குழு முன்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்