தமிழகத்திற்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்

கேரளாவை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 7 ஆம் தேதி அதிதீவிர கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்​வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்
x
கேரளாவை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அதிதீவிர கனமழை ​எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வரும் 7 ஆம் தேதி வரை ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கனமழை நீடிக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமையன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 21 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு  உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வழக்கத்தை விட மிகுந்த சீற்றத்துடன் கடல் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்