டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்
x
பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதே கோரிக்கையை வலியுறுத்தி, வரும் எட்டாம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர். 

நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் : 

இதேபோல நாகையிலும், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால், 200 விசைப்படகுகள் மற்றும் ஐயாயிரம் நாட்டுப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்