கண்டன கூட்டத்திற்கு அனுமதி கோரி திமுக மனு : பரிசீலித்து முடிவு எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தல்

தமிழக அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க, காவல் துறையை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கண்டன கூட்டத்திற்கு அனுமதி கோரி திமுக மனு : பரிசீலித்து முடிவு எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தல்
x
அதிமுக அரசை கண்டித்து, வரும் 3,4 ஆகிய தேதிகளில், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் , 110 இடங்களில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கோரி,  காவல்துறையிடம் அளித்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன்,
தி.மு.கவின் விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என காவல்துறையை அறிவுறுத்தினார்.மேலும், அனுமதி கிடைத்த பிறகு தான் பொதுக்கூட்டங்களுக்கான இடங்களை தீர்மானிக்க வேண்டும் என, தி.மு.க தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்