7 வது மாதத்திலேயே பிறந்த இரட்டை குழந்தைகள் - தனியார் கருத்தரிப்பு மையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
குழந்தைகளை சரியாக பராமரிக்கவில்லை எனக்கூறி தனியார் கருத்தரிப்பு மையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோனிஷா என்பவருக்கு கடந்த 20ம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. 7 வது மாதத்திலேயே பிறந்ததால் மிகவும் பலவீனமாக இருந்த குழந்தைகளை மாருத்துவமனை நிர்வாகம் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் மோனிஷா அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து குழந்தைகளை சரியாக பராமரிக்கவில்லை எனக்கூறி தனியார் கருத்தரிப்பு மையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story