மூட்டு வலி பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்

கடலூர் மாவட்டத்தில் வங்கி காவலாளி-யாக பணிபுரிந்து வந்த முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மூட்டு வலி பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்
x
காட்டுமன்னார்கோயில் அடுத்த கீழக்கரை கிராமத்தை சேர்ந்தவ வீரநாராயணன் தனியார் வங்கி ஒன்றில்  காவலாளியாக  பணியாற்றி வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த போது அலுவலகத்தில் கொடுத்த துப்பாகியால் தனது தாடை பகுதியில் சுட்டுக்கொண்டார். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கட்டிலில் ரத்த வெள்ளத்தில் மூளை சிதறி வீரநாராயணன் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அவரது டைரியில் மூட்டுவலி பிரச்சினை காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று வீரநாராயணன் எழுதிய கடிதத்தை போலீசார் கைபற்றியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்