கடலில் கலக்கும் காவிரி நீரை வேளாண்மை மற்றும் குடிநீர் பயன்படுத்த வேண்டும் - ஸ்டாலின்

கடலில் கலக்கும் காவிரி நீரைத் தடுத்து வேளாண்மை மற்றும், குடிநீர் தேவைகளுக்கு திருப்பி விடுமாறு தமிழக அரசை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடலில் கலக்கும் காவிரி நீரை வேளாண்மை மற்றும் குடிநீர் பயன்படுத்த வேண்டும் - ஸ்டாலின்
x
* மேட்டூர் அணை இருமுறை முழு கொள்ளளவை எட்டியும், அங்கிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர், வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படாமல் நேராகக் கடலில் கலப்பது மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

* நீர் மேலாண்மைக்காக சுமார் 4 ஆயிரத்து 735 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தும், இன்றைக்கு நூற்றுக்கணக்கான டி.எம்.சி. காவிரி உபரி நீர் கடலில் கலக்கிறது என்றால், செலவழித்த பணம் எங்கே போனது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

* பல கோடி ரூபாய் செலவழித்தும், ஏரி, குளங்கள், அணைகளை முறையாக சீரமைக்காமல், விவசாயத்திற்கு தேவைப்படும் உபரி நீர் விரையமாவதற்காக, அதிமுக அரசுக்கு  கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

* இனியாவது, தொலைநோக்கு 'நீர் மேலாண்மை' திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்தும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றியும்,கடலில் கலக்கும் காவிரி நீரை தடுத்து வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் திருப்பி விடுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்