ஆதார்,குடும்ப அட்டை பெற்ற இலங்கை பெண் கைது, இந்திய பிரஜை என அங்கீகாரம் பெறாததால் சென்னை உயர் நீதிமன்றம் விடுவிக்க மறுப்பு...
ஆதார் அட்டை, குடும்ப அட்டை பெற்ற இலங்கை பெண்ணை இந்திய பிரஜையாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
இலங்கை போர் காரணமாக 1989 ஆம் ஆண்டு இந்தியா வந்த ஜெயந்தி என்ற பெண், 2007 ஆம் ஆண்டு முதல் இத்தாலியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தனது மூத்த மகள் திருமணத்திற்கு இந்தியா திரும்பிய ஜெயந்தியை விமான நிலையத்தில் சிறைபிடித்துள்ளதாகவும் அவரை விடுவிக்க கோரியும் ஜெயந்தியின் இளைய மகள் திவ்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜா, ஜெயந்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து இந்திய பிரஜை என அங்கீகாரம் பெறாததால் மனுவை தள்ளுபடி செய்தார்.
Next Story