ஒரே மேடையில் 8 உலக சாதனைகள்..!

சிவகங்கை மாணவர்கள் சாதனை உலக சாதனை புத்தகத்தில் அங்கீகாரம்.
ஒரே மேடையில் 8 உலக சாதனைகள்..!
x
    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கடும் பயிற்சி செய்து ஒரே மேடையில் எட்டு சாதனைகளை அரங்கேற்றியுள்ளனர். சீனியர், ஜூனியர் என இருபிரிவுகளின் கீழ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. டேவிட்சன் என்ற இளைஞர் சீனியர் பிரிவில் பங்கேற்று ஒரே நிமிடத்தில் விரல் நுனியில் 130 தண்டால் எடுத்து சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல், டீ டம்ளர்கள் மீது கையை மணிகட்டை மடக்கியவாறு 72 தண்டால்கள் எடுத்தார். 
    ஜூனியர் பிரிவில் மஹிபாலன், தருண்பிரபு, குருபிரசாத், தர்ஷண், ஜோதிகிருஷ்ண‌ன் ஆகியோர், சிட் அப்ஸ் எடுத்தல், 290 முறை பன்ச் செய்தல் என பல உலக சாதனைகளை நிகழ்த்தினர். இந்த சாதனைகள் அனைத்தும் காணொளியாக பதிவு செய்யப்பட்டு உலக சாதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதா சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினார். இளைஞர்களை கவுரவித்து பேசிய மாவட்ட ஆட்சியர் லதா மாணவர்களின் சாதனை ஆக்கப்பூர்வமானது என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்