கோவை : குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
உற்சாகமாக நனைந்து மகிழும் சுற்றுலா பயணிகள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள குரங்கு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை கூடியுள்ளது.வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளாவில் இருந்தும் வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் உடைகள் மாற்றவும், இரும்புக்கம்பி தடுப்புகள் அமைத்து தரவும் வனத்துறையினருக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
Next Story