9 ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்த சக மாணவி

6 மாதங்களுக்கு மருத்துவமனையில் சேவை செய்ய வேண்டும் விழுப்புரம் இளம் சிறார் நீதி குழுமம் தீர்ப்பு
9 ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்த சக மாணவி
x
* விழுப்புரம் அருகே 9 ஆம் வகுப்பு மாணவியை கிணற்றில் தள்ளி கொலை செய்து தங்க நகை திருடிய  10 ஆம் வகுப்பு மாணவிக்கு நீதிபதி வித்தியாசமாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

* திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்ற  லாரி ஓட்டுநரின் மகள் சசிரேகா, ஓமந்தூரில் உள்ள அரசு பள்ளியில்  9-ஆம் வகுப்பு படித்து வந்தார். 

* கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற  மாணவி சசிரேகா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பின்னர் மொளசூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சசிரேகா சடலமாக மீட்கப்பட்டார். 

* இது தொடர்பாக கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  அதே பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு  மாணவி,  நகைக்காக சசிகலாவை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விழுப்புரம் இளம் சிறார் நீதி குழுமத்தில் நடைபெற்று வந்த வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. 

* அதில்  மாணவி, வரும் 10 ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு பகல் நேரங்களில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேவை செய்ய வேண்டும் என நீதிபதி மும்தாஜ் தீர்ப்பளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்