"எல்லாம் போச்சே..." கதறிய நபர் - நொடியில் சிதறிய 20 வருட உழைப்பு... அதிர வைத்த CCTV காட்சி

x

திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இன்சூரன்ஸ் பணம் 6 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த சொக்கலாம்பட்டியை சேர்ந்த சக்தி, கடந்த 20 வருடமாக காப்பீட்டு திட்டத்தில் பணம் செலுத்தி வந்துள்ளார். காப்பீடு முடிவடைந்ததையடுத்து 6 லட்சம் ரூபாய் பணத்தை தனது வங்கி கணக்கிலிருந்து எடுத்த அவர், இருசக்கரவாகனத்தில் பணத்துடன் ஆசிரியர் நகரிலுள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்த மர்ம கும்பல், சக்தி கடைக்கு சென்றதை நோட்டமிட்டு இருசக்கரவாகனத்தில் இருந்த பணத்தை எடுத்துச்சென்றனர். கடைக்கு சென்று திரும்பிய சக்தி, இருசக்கரவாகனத்திலிருந்த பணத்தை காணாது அதிர்ச்சியடைந்த நிலையில், திருட்டு குறித்து புகாரளித்தார். சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் மர்மகும்பலை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்