+2 ஆங்கிலத்தேர்வு - "12,696 மாணவர்கள்.. " - வெளியான அதிர்ச்சி தகவல்

x

12ம் வகுப்பு ஆங்கில தேர்வை 12 ஆயிரத்து 696 மாணவர்கள் எழுதவில்லை என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச்1ல் தொடங்கி, 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வினை எழுதுவதற்கு, 3 ஆயிரத்து 302 மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில்,12 ஆயிரத்து 696 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை எனவும், 3 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளதாகவும் அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்