32 பைக்குகளை ஆட்டைய போட்ட 2 ஜெகஜால திருடர்கள் | Chennai | Bike Theft

x

சென்னையில், தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 32 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என புகார் அளித்திருந்தார். சத்யசாய் நகர் பகுதியில் இருசக்கர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமாக வந்த பல்சர் வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். அப்போது அதில் பயணம் செய்த இருவரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த கலிமுல்லா என்கிற அலி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர்களிடம் இருந்து 32 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்