17 லட்சம் சுருட்டி கொண்டு சொந்த ஊருக்கு சென்று முதலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வடமாநில நபர்..

x

தேனி நகரில் செல்போன் மொத்த வியாபாரம் செய்து வரும் மிதுன்சிங் என்பவர், தனது கடையில் பல ஆண்டுகளால வேலை பார்த்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த லூதுராம் என்பவரை மேலாளராக நியமித்திருந்தார். இந்நிலையில், தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை பார்ப்பதற்கு மிதுன் சிங் ராஜஸ்தான் சென்ற நேரத்தில், லாதுராம் கடையை கவனித்து வந்தார். அப்போது, கடையில் வாடிக்கையாளர் பணம் செலுத்த மிதுன் சிங் வைத்திருந்த கியூ ஆர் கோடு பலகையை எடுத்து விட்டு, அதில் தனது கியூ ஆர் கோடு பலகையை லூதுராம் வைத்துள்ளார். இதனால் வாடிக்கையாளர் செலுத்திய பணம் முழுவதும், லூதுராமின் வங்கிக் கணக்கிற்கே சென்றுள்ளது. இந்நிலையில், மிதுன் சிங் தேனிக்கு திரும்புவதாக கூறிய நிலையில், கடையில் இருந்த 6 லட்ச ரூபாயையும் எடுத்துக் கொண்டு லூதுராம் தனது ஊருக்குத் தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து ஊர் திரும்பிய மிதுன் சிங், கடைக்குச் சென்று வங்கி கணக்கை சரிபார்த்தபோது, அதில் பணம் ஏறாமல் இருப்பது கண்டு லூதுராமை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளார். அப்போது, பணம் கேட்டால் கொலை செய்து விடுவதாக லூதுராம் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மிதுன் சிங், தேனி மாவட்ட காவல் கண்கானிப்பாளரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, லூதுராமை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்