சென்னையில் சிக்கிய 15 ஆயிரம் போதை மாத்திரை..பிடிபட்ட இருவர்.. வெளியான பின்னணி..

x

சென்னையில் சிக்கிய 15 ஆயிரம் போதை மாத்திரை..பிடிபட்ட இருவர்.. வெளியான பின்னணி..

#tablet #chennai #thanthitv

கோவில்பதாகை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக ஆவடியில் இருந்து செங்குன்றம் நோக்கிச் மாநகரப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். போலீசாரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்தில் இருந்த 3 பேர், தாங்கள் வைத்திருந்த கைப்பையை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அதில், சோதனை செய்தபோது, 15 ஆயிரம் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தப்பிச் சென்ற 3 பேரை விரட்டிப் பிடித்ததில், இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், முகப்பேர் பகுதியை சேர்ந்த தினேஷ் மற்றும் கலையரசு என தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்