15 வயது சிறுமி கையில் விலங்கு..குண்டை தூக்கிப்போட்ட சிறுமியின் தாய்..உண்மையை உடைத்த எஸ்பி

x

உதகை அருகே உள்ள பர்ன்ஹில் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என அவரது தாயார் புகார் அளித்திருந்தார். காவல்துறை நடத்திய விசாரணையில் அச்சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்த‌து தெரிய வந்த‌து. இதையடுத்து, திருமணம் செய்த ராபின் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை காப்பகத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து, கடந்த 7ஆம் தேதி கோத்தகிரியில் உள்ள நீதிமன்றத்தில் சிறுமியை ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்துச் சென்று மீண்டும் காப்பகத்தில் விடப்பட்டார். ஆனால், குற்றவாளியைப் போன்று கை விலங்கு போட்டு அழைத்துச் சென்றதாக சிறுமியின் தாயார் கடந்த 16ஆம் தேதி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். இந்தசம்பவம் தொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்