10 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் - வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி

x

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் புகார் குறித்து, பழனி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் . போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என பயணிகளிடம் கேட்டு அறிந்தனர். இதற்கிடையே சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல், பாரம் ஏற்றி பயணித்ததால் 10 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை வருகிற 24-ஆம் தேதி வரை நடைபெறும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்