உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்..முதல் போட்டியிலேயே இங்கிலாந்தை..அடித்து நொறுக்கிய நியூசிலாந்து

x

13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்தும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து, பவுலிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்