உலகமே உற்று நோக்கும் சிவில் வார்(IND vs PAK) வெற்றிக்கனியை பறிக்குமா இந்தியா ? | INDIA | Cricket

x

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றின் மூன்றாவது ஆட்டத்தில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. முதல் போட்டியில் வென்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசமாக்க பாகிஸ்தான் முயற்சிக்கும். அதேசமயம் சூப்பர் ஃபோர் சுற்றை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கும். கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், ரிசர்வ் தினமான நாளை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்