சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடர்...மகுடம் சூடினார் சுமித் நாகல்

x

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர்ப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகலும் இத்தாலி வீரர் லூகா நார்டியும் மோதினர். ஆட்டத்தின் முதல் செட்டில் அதிரடியாக ஆடிய சுமித் நாகல், 6க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். தொடர்ந்து 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய சுமித் நாகல், 2வது செட்டை 6க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் தன்வசப்படுத்தினார். இதன்மூலம், 6க்கு 1, 6க்கு 4 என்ற நேர் செட்களில் சுமித் நாகல் வெற்றி பெற்று சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் சாம்பியன் ஆனார்.


Next Story

மேலும் செய்திகள்