சென்னை ஓபன் டென்னிஸ் - ஆடவர் இரட்டையர் பிரிவு..இந்தியாவின் சாகேத் - ராம்குமார் இணை சாம்பியன்.. வெற்றி பெற்ற இணைக்கு ரூ.6.30 லட்சம் பரிசு

x

சென்னை ஓபன் ஆடவர் டென்னிஸ் தொடரில், இரட்டையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாகேத் மைனேனி - ராம்குமார் ராமநாதன் இணை, மற்றொரு இந்திய ஜோடியான ரித்விக் சௌத்ரி - நிக்கி கலியாண்ட பூனச்சாவை, 3-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற ஜோடிக்கு வெற்றிக் கோப்பையுடன், 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இதேபோல ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், செக் குடியரசின் டலிபார் ஸ்வர்சினாவை தோற்கடித்தார். இதனையடுத்து, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில், இத்தாலியின் லூகா நார்டியை சுமித் நாகல் எதிர் கொள்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்