சென்னை அணியை விலைக்கு வாங்கி... கிரிக்கெட்டிலும் கால்பதித்த சூர்யா...

x

ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் டி10 தொடர் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. இதில், சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 6 அணிகள் பங்கேற்க உள்ளன. மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஎஸ்பிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கியுள்ளனர். இந்நிலையில், சென்னை அணியின் உரிமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். இதனை அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்