கிரிக்கெட் ஜாம்பவானுக்கு சிலை - திருவிழாவில் பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்

x

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை மும்பை வான்கடே மைதானத்தில் இன்று திறக்கப்படவுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் அளப்பரிய சாதனைகளை கவுரவிக்கும் விதமாக, அவரது சொந்த ஊரில் உள்ள வான்கடே மைதானத்தில் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில், சச்சின் டெண்டுல்கர் ஸ்டான்ட் (stand)அருகே இந்த சிலை எழுப்பப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை அணிகள் வருகிற 2ம் தேதி வான்கடே மைதானத்தில் மோதவுள்ள நிலையில், இன்று மாலை சச்சின் டெண்டுல்கரின் சிலை திறக்கப்படவுள்ளது. விழாவில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்