நாட்டு.. நாட்டு பாடலுக்கு நடனமாடிய சச்சின், சூர்யா, ராம் சரண்

x
  • இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐஎஸ்பிஎல் போட்டி தொடர், மும்பையில் தொடங்கியுள்ளது
  • 10 ஓவர் டென்னிஸ் பால் கிரிக்கெட் தொடரான ஐஎஸ்பிஎல், இன்று தொடங்கியுள்ளது. இத்தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள், திரைப்பட நட்சத்திரங்களை உரிமையாளர்களாக கொண்டுள்ளன. குறிப்பாக மும்பை அணிக்கு அமிதாப் பச்சன், சென்னை அணிக்கு சூர்யா, ஹைதராபாத் அணிக்கு ராம்சரண் ஆகியோர் உரிமை வகிக்கின்றனர். இந்தசூழலில், ஐஎஸ்பிஎல் தொடரின் தொடக்க விழா மும்பையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் பங்கேற்றார். அப்போது அவர், ராம்சரண், சூர்யா, அக்‌ஷய் குமார் ஆகியோடு இணைந்து, நாட்டு - நாட்டு பாடலுக்கு நடனமாடினார்.


Next Story

மேலும் செய்திகள்