ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரோகித் சர்மா | rohit sharma

x

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். அறிமுக வீரராக ரஜத் பட்டிதார் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், குல்தீப் யாதவும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் மார்க் உட், ஜேக் லீச்சுக்கு பதிலாக ஆன்டர்சன், சோயிப் பஷீர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தற்போது விளையாடி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களில் அவுட் ஆகி, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்....--


Next Story

மேலும் செய்திகள்