2024 டி20 உலகக்கோப்பைக்கு யார் கேப்டன்? - அறிவித்தார் ஜெய்ஷா | Hardik Pandya

x

இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரில், இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவே செயல்படுவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரில், இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவாரா அல்லது ஹர்திக் பாண்டியா செயல்படுவரா என ரசிகர்களிடையே குழப்பம் நிலவி வந்தது. இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்தாண்டு உலக கோப்பையை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் வெல்லும் என, உறுதியளிப்பதாக கூறினார். இதன்மூலம் ரோகித் சர்மா, டி20 உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தப்போவது உறுதியாகியுள்ளது. நிகழ்ச்சியின் பேசும்போது, ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லாவிட்டாலும், இதயங்களை வென்றுவிட்டதாக ஜெய் ஷா கூறியதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்