விமர்சித்த வாய்களுக்கு பூட்டு போட்ட ரோகித் சர்மா | Rohit Sharma

x

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா படைத்துள்ளார்.பெங்களூருவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ரோகித் சர்மா வாணவேடிக்கை நிகழ்த்தினார். ஆரம்பத்தில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது பொறுப்புணர்ந்து பொறுமையாக ஆடிய ரோகித், ஆட்டத்தின் பிற்பாதியில் அதிரடி காட்டி ஆப்கானிஸ்தான் பவுலர்களை கலங்கடித்தார். சின்னசாமி மைதானத்தில் பவுண்டரி மழை பொழிந்த ரோகித், சதம் விளாசியும் அசத்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் சர்மாவின் 5வது சதமாக இது அமைந்தது. இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் மற்றும் மேக்ஸ்வெல்லை முந்தி ரோகித் முதலிடம் பிடித்தார். முதல் இரண்டு டி20 போட்டிகளில் டக் அவுட் ஆன ரோகித், கடைசி போட்டியில் சதம் விளாசி தன் மீதான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்