அணி பெயரை மாற்றி கெத்தாக சென்னை வந்தடைந்த RCB | IPL 2024

x

ஐ.பி.எல். முதல் போட்டியில் பங்கேற்பதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். வருகின்ற 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும் ஐ.பி.எல். தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இதையொட்டி, பெங்களூர் அணி அணி வீரர்கள் விமானம் மூலமாக சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். தொடர்ந்து அவர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்