பரோடாவை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்த மும்பை

x

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு மும்பை தகுதி பெற்றது. மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மும்பை 384 ரன்களும் பரோடா (BARODA) 348 ரன்களும் அடித்தன. பின்னர் 2வது இன்னிங்சில் மும்பை 569 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 600க்கும் அதிகமான இலக்கை நோக்கி ஆடிய பரோடா, கடைசி நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமன் ஆன நிலையில், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் மூலம் மும்பை அரையிறுதிக்குள் நுழைந்தது.


Next Story

மேலும் செய்திகள்