செஸ் உலகக்கோப்பையில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

x

தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பிரக்ஞானந்தாவின் அபாரமான செயல்பாடுகளால் பெருமை அடைவதாகும், இறுதிப்போட்டியில் கார்ல்சனுக்கு பிரக்ஞானந்தா கடும் சவால் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்த சர்வதேச தொடர்களில் பிரக்ஞானந்தா வெற்றி பெற வாழ்த்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்