நெதர்லாந்தை பந்தாடிய இந்தியா... 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

x

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார். ரன் குவிப்பிற்கு சாதகமான மைதானத்தில் ரோகித் சர்மா - சுப்மன் கில் தொடக்க ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி நேர்த்தியாக ஆடி அரைசதம் அடித்தார். 4வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் - கே.எல்.ராகுல் ஜோடி 208 ரன்கள் சேர்த்தது. இருவரும் சதம் விளாசி அசத்திய நிலையில், 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்தது. இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் 5 பேர், ஐம்பதுக்கும் அதிகமான ரன்கள் அடித்து சாதனை படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்