"தோனி உள்ளே வந்தவுடன் வெளியே சென்ற பந்து" - அதிரடி காட்டிய `தல' - அதிர விட்ட ரசிகர்கள்

x

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி அதிரடி காட்டினார். நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பேட்டிங்கில் களமிறங்கிய தோனி 16 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார். 4 ஃபோர் , 3 சிக்சர்களை விளாசி ரசிகர்களை மகிழ்வித்த முன்னாள் கேப்டன் தோனியை, மைதானத்தை அதிரச் செய்யும் அளவுக்கு தோனி...தோனி... என கோஷம் எழுப்பி ரசிகர்கள் கொண்டாடினர். இதனிடையே போட்டி முடிந்த பிறகு விசாகப்பட்டினம் மைதான பராமரிப்பு ஊழியர்களுடன் இணைந்து தோனி புகைப்படம் எடுத்துக் கொண்டார். விசாகப்பட்டினத்தில் இது தோனியின் கடைசிப் போட்டியாகப் பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்